×

திருப்புத்தூரில் கிடப்பில் சாலை பணி: பொதுமக்கள் கடும் அவதி

திருப்புத்தூர்: திருப்புத்தூர் காளியம்மன் கோயில் தெரு சாலை பணி கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர்-மதுரை ரோடு பெட்ரோல் பங்க்லிருந்து சின்னத்தோப்பு தெரு வழியாக காளியம்மன் கோயில் வரை சாலை அமைப்பதற்காக ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் கடந்த மாதம் கொட்டப்பட்டன. தற்போது பல நாட்களாகியும் சாலைப்பணி நடைபெறவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஜல்லி கற்கள் கொட்டி இன்றுவரை பணி நடைபெறாததால் 5 வீதிகளை சேர்ந்தவர்கள் இச்சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். சாலையை காரணம் காட்டி பள்ளி வாகனங்கள் வர தயங்குவதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நீண்டதூரம் அழைத்து சென்று வாகனங்களில் ஏற்றிவிட வேண்டி உள்ளது. கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruputhur, road work, civilians
× RELATED மிளகு சாகுபடியில் புதுப்புது...